பல்வேறு விமர்சனங்களுக்கு ஆளாகி இருக்கும் மத பிரசாரகர் ஜாகீர் நாயக், சவுதியில் தங்கி இருக்கிறார். இவரை இந்தியா டுடே தொலைக்காட்சி நிருபர் பேட்டி எடுத்துள்ளார்.
இந்த பேட்டியில் நிருபர் கேட்கும் பல்வேறு கேள்விகளுக்கு நாயக் பதில் கூறியுள்ளார். இந்த பேட்டியில் அவர் கூறியிருப்பதாவது: மீடியாக்கள் தான் என்னை பயங்கரவாதியாக சித்தரிக்கிறது.
நான் எப்போதும் வன்முறை தூண்டல் பேச்சு பேசியது கிடையாது. எப்போதும் மனித நேயத்தை வலியுறுத்தியே பேசியுள்ளேன்.
வங்கதேச பயங்கரவாதி எனது ரசிகன் என்று தான் கூறியுள்ளான். இதில் என்ன தவறு இருக்கிறது ? ஆனால் இந்திய மீடியாக்கள் என்னை பற்றி தவறாக சித்தரிக்கிறது. இதனை நிறுத்தி கொள்ளுமாறு கேட்டு கொள்கிறேன். நான் யாருக்கும் பயப்பட தேவையில்லை. இவ்வாறு கூறியுள்ளார்.
சமீபத்தில் வங்கதேசத்தில் நடந்த தாக்குதலில் ஈடுபட்ட ஒரு பயங்கரவாதி ஜாகீர் நாயக் பேச்சை கேட்டு இவ்வாறு மாறியதாக கூறியிருந்தான்.
இதனையடுத்து மத்திய அரசு ஜாகீர் நாயக் தொடர்பான விஷயங்களை தீவிர விசாரித்து வருகிறது. உரிய நேரத்தில் இந்தியா திரும்பாமல் அவர் இன்னும் சவுதியில் தங்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக