Breaking News
recent

குஜராத்தில் இறந்து போன பசுமாட்டின் தோலை உரித்ததற்காக 4 பேர் மீது சரமாரி தாக்கு.!


குஜராத் மாநிலத்தின் ஏற்கனவே இறந்த பசுமாட்டின் தோலை உரித்த தலித்துகள் மீது கும்பல் ஒன்று சரமாரியாகத் தாக்கியுள்ளனர்.

குஜராத்தின் கிர் சோம்நாத் மாவட்டத்தில் மோட்டா சமதியாரா என்ற கிராமத்தில் ஏற்கனவே இறந்த பசுமாட்டின் தோலை உரித்த தலித்துகள் மீது கும்பல் ஒன்று சரமாரியாகத் தாக்கியுள்ளனர்.

இந்தச் சம்பவத்தின் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவ போலீஸார் தலித்துகளை தாக்கிய 6 பேரில் 3 பேரை கைது செய்தனர். மீதி 3 பேர் தலைமறைவாகியுள்ளனர்.

பாதிக்கப்பட்ட தலித்துகள் ஏற்கனவே இறந்த பசுமாடு என்று கூறுகையில் தாக்கியவர்களோ அது கொல்லப்பட்டது என்று சந்தேகத்தின் பேரில் தாக்குதலில் ஈடுபட்டதாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.