இந்த மோதலில் யூசூப்( வயது 21), அப்துஸ் சலாம் (22) என்ற இரண்டு சவூதி அரேபிய நாட்டு கைதிகள் மற்றும் மணிப்பூரை சேர்ந்த கைதி தங்மின்லயன் ஆகிய மூவரும் உயிரிழந்தனர்.
மேலும்,மோதலை கட்டுப்படுத்த முயன்ற சிறை அதிகாரி உட்பட 4 பேர் காயம் அடைந்தனர். உயிரிழந்த மூவரின் உடலும் பிரதேச பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அடுத்த கட்ட நடவடிக்கைக்காக இறந்த சவூதி அரேபிய கைதிகளின் விபரத்தை சிறை அதிகாரிகள் மத்திய அரசுக்கு அனுப்பியுள்ளனர்.
சவூதி அரேபிய நாட்டு கைதிகள் பேசும் மொழி பிற கைதிகள் யாருக்கும் தெரியாது என்று கூறப்படுகிறது. இந்த திடீர் மோதலுக்கான காரணம் என்னவென்று தெரியவில்லை. காரணம் குறித்து அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக