Breaking News
recent

அமெரிக்காவில் 30 நோன்பு நோற்கும் 5 வயது தமிழ்ச் சிறுவன்.!



அமெரிக்கா கலிபோர்னியா மகாணத்தில் வசித்து வருபவர். அப்துல் ரஹ்மான். 

இவரது மகன் முஹம்மது சபியுல்லாஹ் ( வயது 5 ). இவர் தஞ்சை 'நேஷனல் பார்மா' மருந்தக உரிமையாளர் கமால் பாட்சா பேரன் ஆவார்.

புனிதமிகு ரமலான் மாதத்தில் இஸ்லாமியர்களின் 5 கடமைகளில் ஒன்றாகிய நோன்பு நோற்பது உலகெங்கும் உள்ள இஸ்லாமியர்களால் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் சிறுவன் முஹம்மது சபியுல்லாஹ் புனிதமிகு ரமலான் மாதம் 30 நாட்களிலும் உற்சாகத்துடன் நோன்பு நோற்று வருகிறார். 

30 நோன்புகளை எட்டுவதற்கு இன்னும் இரண்டு தினங்களே உள்ள நிலையில் கலிபோர்னியா மகாணம் சிலிக்கன் வேலி சான்ட்ட கிளாரா எம்சிஏ பள்ளியில் நேற்று நடந்த இஃப்தார் எனும் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் தமதுஉறவினர்களோடு கலந்துகொண்டார்.

இந்நிகழ்ச்சியில் கலிபோர்னியா வாழ் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஏராளமான தமிழ் இஸ்லாமியர்கள் கலந்துகொண்டு சிறுவனின் ஆர்வத்தை பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.




VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.