Breaking News
recent

கத்தார் நாட்டில்3 தமிழர்களுக்கு தண்டனை: மேல்முறையீடு செய்ய ரூ.9.50 லட்சம் வழங்க முதல்வர் உத்தரவு.!


தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப் பில் கூறி இருப்பதாவது:–
கத்தார் நாட்டில் புதுக் கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த அழகப்பா சுப்பிர மணி, விருதுநகரைச் சேர்ந்த செல்லத்துரை பெருமாள் மற்றும் சேலத்தைச் சேர்ந்த சிவக்குமார் அரசன் ஆகியோர் மீது கத்தார் நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட தண்டனையை எதிர்த்து கத்தார் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வதற்கு ஏதுவாக 9 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயை உடனடியாக வழங்க முதல்–அமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள் ளார்.


கத்தார் நாட்டில் பணி புரிந்து வந்த மூன்று தமிழர்கள் அங்கு ஒரு பெண்மணியை கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டனர். அதன் காரணமாக, 2012ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் அவர்கள் கத்தார் நாட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். 


2015ஆம் ஆண்டு ஜனவரி மாதம் புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த அழகப்பா சுப்பிரமணி, விருதுநகரைச் சேர்ந்த செல்லத்துரை பெருமாள் மற்றும் சேலத்தைச் சேர்ந்த சிவக்குமார் அரசன் ஆகியோர் குற்றவாளிகள் என கத்தார் நீதிமன்றத்தால் தீர்மானிக்கப்பட்டு அவர் களுக்கு மரண தண்டனை வழங்கப்பட்டது.

கத்தார் நாட்டில் உள்ள இந்திய தூதரகத்தின் உதவி யுடன் தண்டனை அளிக்கப் பட்ட மூவரும் மேல் முறையீடு செய்ததன் அடிப்படையில் திருவாளர்கள் அழகப்பா சுப்பிரமணி, செல்லதுரை பெருமாள் ஆகியோருக்கு வழங்கப்பட்ட மரண தண்ட னையை உறுதி செய்தும், சிவக்குமார் அரசனுக்கு அளிக்கப்பட்ட மரண தண்ட னையை ஆயுள் தண்டனை யாக மாற்றியும் கத்தார் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள் ளது.


இது பற்றி தெரிய வந்தவுடன், இந்திய தூதரக அதிகாரிகள் சிறையில் உள்ள மூன்று தமிழர்களை சந்திக்க வழக்கறிஞர்களை ஏற்பாடு செய்தனர். வழக்கறிஞர்கள், கத்தார் நாட்டு உச்சநீதிமன்றத்தில் உடனடியாக மேல்முறையீடு செய்யப்பட வேண்டும் என்றும், அதற்கு சுமார் 9 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் செலவாகும் என்றும் தெரிவித்துள்ளனர்.


இந்த விவரங்களை கத்தார் நாட்டில் உள்ள இந்திய தூதரகம் தமிழக அரசிற்கு தெரிவித்து மூன்று தமிழர்களின் மேல் முறையீட்டு வழக்குகளை கத்தார் நாட்டு உச்சநீதி மன்றத்தில் எடுத்துச் சென்று வழக்காடுவதற்கு ஏதுவாக 9 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயை அனுப்பும்படி கேட்டுக் கொண்டுள்ளது.


இது தொடர்பாக, நேற்று கத்தார் நாட்டில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள செல்லதுரை பெருமாள் என்பவரின் மனைவி ராஜம் மாள் அவர்கள் கத்தார் நாட்டில் சட்ட உதவிகளை பெறுவதற்கு தேவையான உதவிகளை அளிக்குமாறு முதல்–அமைச்சரை கேட்டுக் கொண்டுள்ளார்.


முதல்–அமைச்சர் கத்தார் நீதி மன்றத்தால் மரண தண்டனை வழங்கப்பட்டுள்ள திருவாளர்கள் அழகப்பா சுப்பிரமணி, செல்லதுரை பெருமாள் மற்றும் ஆயுள் தண்டனை வழங்கப்பட் டுள்ள சிவக்குமார் அரசன் ஆகியோர் கத்தார் நாட்டு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வதற்கு ஏதுவாக 9 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயை உடனடியாக கத்தார் நாட்டில் உள்ள இந்திய தூதரகத்திற்கு அனுப்பி வைத்திடவும், தண்டனை பெற்ற தமிழர்கள் உச்சநீதிமன்றத்தில் முறை யாக மேல்முறையீடு செய் வதை உறுதி செய்யும்படியும், தமிழக அரசு அதிகாரி களுக்கு உத்தரவிட்டார்.

இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.