கத்தாரில் நடந்த மூதாட்டி கொலை வழக்கு ஒன்றில், தமிழகத்தை சேர்ந்த செல்லதுரை, சுப்ரமணியம் ஆகியோருக்கு மரண தண்டனையும், சிவக்குமார் என்பவருக்கு 25 ஆண்டுகள் ஆயுள் தண்டனையும் விதித்து அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த வழக்கு தொடர்பாக வழக்கறிஞர் சுரேஷ்குமார், கத்தாருக்கு நேரில் சென்று சிறையில் உள்ளவர்களை சந்தித்துள்ளார்.
இதுதொடர்பாக சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், வரும் 30-ம் தேதி தண்டனை நிறைவேற்ற தேதி குறிக்கப்பட்டுள்ளதாகவும், அதற்கு முன்பாக அந்நாட்டு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு தாக்கல் செய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்தார்.
இந்த விவகாரத்தில் தலையிட்டு 3 பேரின் விடுதலைக்கு தமிழக அரசு உதவ வேண்டும் என்று செல்லதுரையின் மனைவி ராஜம்மாள் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக