மெக்காவில் பெரிய மசூதி அருகே நேற்று இரவு நிகழ்ந்த கூட்ட நெரிசலில் 18 யாத்திரிகர்கள் காயம் அடைந்துள்ளதாக சவுதி அரேபியாவில் உள்ள ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
முஸ்லீம்களின் பண்டிகையான ரமலானின் மிகப்புனித இரவைக் குறிக்கும் விதமாக பெரிய அளவிலான கூட்டம் கூடியிருந்தது.
இந்த சம்பவத்தின் போது காயம் அடைந்தவர்கள் அனைவருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.
வருகிற செப்டம்பரில் இந்த ஆண்டின் ஹஜ் புனித யாத்திரை தொடங்கவுள்ள நிலையில், சவுதி அதிகாரிகள் புதிய பாதுகாப்பு நடைமுறைகளை அமல்படுத்துவதில் தொடர்ந்து ஈடுபட்டு வரும் சூழலில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
கடந்தாண்டு மெக்காவில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில், 2,000க்கும் அதிகமானோர் சிக்கி பலியானது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக