வீடுகளுக்கு, 100 யூனிட் இலவச மின்சார வழங்கும் திட்டத்தின் கீழ், இன்று முதல் முழு கட்டண சலுகை கிடைக்க உள்ளது.
சட்டசபை தேர்தலை ஒட்டி, அ.தி.மு.க., தேர்தல் அறிக்கையில், ‘வீடுகளுக்கு, 100 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படும்’ என, அறிவிக்கப்பட்டது. அதன்படி, தேர்தலில் வெற்றி பெற்று, மே, 23ல், மீண்டும் முதல்வராக ஜெயலலிதா பொறுப்பேற்றார். அவர், அன்றைய தினம், 100 யூனிட் இலவச மின்சாரம் உட்பட, ஐந்து கோப்புகளில் கையெழுத்திட்டார். அதன்படி, இலவச மின்சார திட்டம், மே, 23ல்
இருந்து செயல்பாட்டிற்கு வந்தது.மின் வாரியம், வீடுகளில், 60 நாட்களுக்கு ஒருமுறை மின் பயன்பாடு கணக்கு எடுக்கிறது. இந்த சலுகை திட்டம் அமலுக்கு வந்த, 60 நாட்களுக்கு பின் தான், முழு கட்டண சலுகைகிடைக்கும்.
உதாரணமாக, ஒருவரின் வீட்டில், ஜூன், 15ம் தேதி, மின் பயன்பாடு கணக்கு எடுக்கப்பட்டது. திட்டம் துவங்கிய மே, 23ம் தேதியில் இருந்து, ஜூன், 15 வரை, 23 நாட்கள் வருகிறது. அந்த, 23 நாட்களை, 60ல் வகுத்து, 100 என்ற எண்ணால் பெருக்கும் போது, 38 யூனிட் வரும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக