சிறையில் உள்ள முஸ்லிம்கள் நோன்பு நோற்பதற்கு உணவு வழங்க அனுமதி அளிக்க வேண்டும் – தமிழக அரசிடம் TNTJ கோரிக்கை….!!
தமிழக சிறைகளில் வாடும் முஸ்லிம் சிறைவாசிகள் நோன்பு நோற்பதற்கு உணவு வழங்க அனுமதி அளிக்க வேண்டுமென்று தமிழக அரசிடம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோரிக்கை விடுத்துள்ளது.
இதுதொடர்பான முழுவிவரம் பின்வருமாறு….
தமிழக சிறையில் உள்ள முஸ்லிம் கைதிகள் நோன்பு நோற்பதற்கு, ரமலான் மாதம் முழுவதும் சஹர் மற்றும் இஃப்தார் உணவை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தனர்.
சிறைவாசிகளின் கோரிக்கையை ஏற்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் துணை பொதுச்செயலாளர் M. தவ்ஃபீக் மற்றும் மாநிலச் செயலாளர் பா.அப்துல் ரஹ்மான் ஆகியோர் தமிழக அரசின் சட்டம் மற்றும் சிறைத்துறை அமைச்சர் C.Ve.சண்முகம் அவர்களை தலைமைச் செயலகத்தில் நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.
அந்த மனுவில்…
தமிழக சிறைகளில் உள்ள முஸ்லிம்கள் நோன்பு நோற்பதற்கு ஏதுவாக அதிகாலை நேரத்திலும், நோன்பு திறக்கும் மாலை நேரத்திலும் உணவுப் பொருள்களை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக வழங்க, வழக்கம்போல் அனுமதியளிக்க வேண்டும் என்று கோரியிருந்தனர்.
மனுவை பெற்றுக் கொண்ட அமைச்சர் சண்முகம், உடனடியாகப் பரிசீலிப்பதாக நிர்வாகிகளிடம் தெரிவித்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக