எதிர்வரும் புனித ரமலான் -1437 / 2016 ஐ முன்னிட்டு, மக்கா-கஃபதுல்லாஹ்வும், மதீனா- மஸ்ஜிதுன் நபவிய்யும் சுத்தம் செய்யப்பட்டும், தயார்படுத்தப்பட்டும் வருகின்றன.
அதிகளவிலான யாத்திரியர்கள் இரு புனிதஸ்த்தலங்களில் ஒன்று கூடவிருப்பதனால் சுத்தம்,சுகாதார விசியங்களில் கூடுதல் கவனம் மேற்கொள்ளப்பட்டுவருகின்றது.
ரமலான் மதமான இந் நாட்களில் பணிபுரிவதற்கு உலகின் பல நாடுகளில் இருந்தும் பணியாளர்கள் தருவிக்கப்பட்டுள்ளார்கள்.
காபட்(விரிப்பு)கள், ஸம்ஸம் நீர் அருந்தும் பகுதிகள், இஃதிகாப்(f), தவாப்(f) செய்யும் இடங்கள் என பல் வேறுபட்ட வகையான சிரமதானப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு இரு புனிதஸ்த்தலங்களும் ரமழான் மாத வருகைக்காக தயாராகின்றன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக