Breaking News
recent

பஞ்சாபில் பதற்றம்! திருக்குர்ஆன் பக்கங்களை கிழித்துப்போட்டதால் பயங்கர கலவரம் வெடித்தது.!(photos)


இந்தியாவின் பஞ்ஞாப் மாநிலத்தில் மலர்கொட்லாவில் கலவரம் வெடித்துள்ளதாக வட இந்திய ஊடக செய்திகள் தெரிவிக்கின்றன.

முஸ்லிம்கள் அதிகமாக வாழும் மலர்கோட்லா பிரதேசத்தில் உள்ள மையவாடி ஒன்றில் குரான் பிரதிகள் கிழித்து ஏரியப்பட்டுள்ளதாக வெளியான செய்திகளை அடுத்து அங்கு கலவரம் வெடித்துள்ளது.

குறித்த கலவரத்தில் பஸ் ,கார்கள் உள்ளிட்ட வாகனங்களும் தீக்கிரையாக்கப்பட்டுள்ள அதேவேளை வர்த்தக நிலையங்களும் சேதமாக்கப்பட்டுள்ளன.

மேலும் கலவரத்தில் ஈடுபட்டவர்கள் அப்பிரதேச எம் எல் ஏ ஒருவரின் வீட்டுக்குள் புகுந்துள்ளபோது பொலிஸார் துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர்.

கலவரத்தை கட்டுப்படுத்த முன்னெடுத்த நடவடிக்கைகளின் போது பொலிஸார் உற்பட பொதுமக்கள் 8 பேர் வரை காயமடைந்துள்ளனர்.

கலவரத்தை அடக்க பொலிஸார் துப்பாக்கி சூடு நடத்தியுள்ளதாகவும் வட இந்திய ஊடக செய்திகள் தெரிவிக்கின்றன.





VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.