முஸ்லிம்கள் அதிகமாக வாழும் மலர்கோட்லா பிரதேசத்தில் உள்ள மையவாடி ஒன்றில் குரான் பிரதிகள் கிழித்து ஏரியப்பட்டுள்ளதாக வெளியான செய்திகளை அடுத்து அங்கு கலவரம் வெடித்துள்ளது.
குறித்த கலவரத்தில் பஸ் ,கார்கள் உள்ளிட்ட வாகனங்களும் தீக்கிரையாக்கப்பட்டுள்ள அதேவேளை வர்த்தக நிலையங்களும் சேதமாக்கப்பட்டுள்ளன.
மேலும் கலவரத்தில் ஈடுபட்டவர்கள் அப்பிரதேச எம் எல் ஏ ஒருவரின் வீட்டுக்குள் புகுந்துள்ளபோது பொலிஸார் துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர்.
கலவரத்தை கட்டுப்படுத்த முன்னெடுத்த நடவடிக்கைகளின் போது பொலிஸார் உற்பட பொதுமக்கள் 8 பேர் வரை காயமடைந்துள்ளனர்.
கலவரத்தை அடக்க பொலிஸார் துப்பாக்கி சூடு நடத்தியுள்ளதாகவும் வட இந்திய ஊடக செய்திகள் தெரிவிக்கின்றன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக