காஷ்மீர் மாநில தலைநகர் ஸ்ரீநகரில் கரண் மார்க்கெட் பகுதியில் நேற்று வெள்ளிக் கிழமை சிறப்புத் தொழுகைக்காக மக்கள் கூட்டம் அதிகம் வந்து விட பள்ளிவாசல் உள்ளே இடம் இல்லாமல் அதிகமான மக்கள் நின்று தொழுகையை நிறைவேற்ற முயன்ற நேரத்தில்.
விற்பணைக்காக வைத்து இருந்த புத்தம் புதிய துணி விரிப்பை பெரும் திரளாக திரண்டு இருந்த மக்களுக்கு கொடுத்து உதவி செய்து மாபெரும் மனித நேயத்தை வெளிக் காட்டி இருக்கிறார் நேசமிகு சீக்கிய சகோதரர் ஒருவர்!
இந்தியாவில் மதவெறியை தூண்டி முஸ்லிம்களை கருவறுக்க துடிக்கும் காவி பயங்கரவாதிகளுக்கு இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியாகவே இருக்கும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை!
சரியான புரிதலும் சகோதரத்துவமும் மனித நேயமும் அன்பும் பாசமும் எங்கெல்லாம் பரவி இருக்கிறதோ அங்கெல்லாம் மகத்தான மாண்புமிகு மனிதர்களைக் காண முடியும் மதவெறியர்களுக்கு அங்கு வேளையும் இல்லாமல் போய்விடும்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக