( சவூதியா SV21 ) நடுவானில் பறந்து கொண்டிருந்த வேளை அந்த விமானத்தில் பயணம் செய்த நிறைமாதக் கரப்பிணிப் பெண்ணொருவர்
குழந்தையொன்றைப் பிரசவித்ததால் அந்த விமானம் திசைமாற்றப்பட்டு ஹீத்ரோ விமான நிலையத்தில் அவசரகால நிலைமையின் கீழ் தரையிறக்கப்பட்டுள்ளது.
நேற்று புதன்கிழமை இடம்பெற்ற மேற்படி சம்பவம் தொடர்பில் சர்வதேச ஊடகங்கள் இன்று வியாழக்கிழமை செய்திகளை வெளியிட்டுள்ளன.
மேற்படி சவூதி அரேபிய எயார்லைன்ஸ் விமானம் வட அயர்லாந்துக்கு மேல் பறந்து கொண்டிருந்த வேளையிலேயே அந்தப் பெண் குழந்தையைப் பிரசவித்துள்ளார்.
தொடர்ந்து ஹீத்ரோ விமான நிலையத்தில் அவசரகால நிலைமையின் கீழ் இறக்கப்பட்ட விமானத்திலிருந்த தாயும் சேயும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் அவர்கள் இருவரதும் உடல் நிலை ஆரோக்கியமாக இருப்பதாகவும் அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக