முதலிடத்தை தக்க வைத்து கொண்டதுதமிழ்நாடுதவ்ஹீத்ஜமாஅத்குவைத்மண்டலம்.
குவைத்தில் உலக அளவிலான ஆயிரக்கணக்கான அமைப்புகளும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களளும் இயங்கி வருகின்றன.
இவற்றில் பல அமைப்புகள் தொடர்ந்து இரத்த தானத்திற்கான முகாம்களை நடத்தி வருகின்றன.
இவற்றை ஊக்குவிக்கும் விதமாக குவைத் சுகாதாரத்துறை அமைச்சின் கீழ் இயங்கும் மத்திய இரத்த வங்கி வருடந்தோறும் கௌரவ விருதுகளை வழங்கி வருகிறது.
அந்த வகையில் நேற்று 13-6-2016 அன்று குவைத் அவென்யூஸ் நவீன சந்தையின் பிரம்மாண்டமான பிரஸ்டீஜ் உள்ளரங்கில் இந்த வருடத்திற்கான விருது வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
குருதி கொடை வழங்குவதில் தொடர்ந்து பத்து ஆண்டு காலமாக குவைத்தில் அதிகமான இரத்த தானம் செய்தவர்கள் பட்டியலில் முதலிடத்தில் இருந்து வருகிறது தவ்ஹீத் ஜமாஅத்.
அதில் இந்த வருடமும் அதிகமாக இரத்த தானம் செய்த அமைப்பிற்கான முதலிட விருதை குவைத் சுகாதாரத்துறை அமைச்சகம் பத்தாவது முறையாக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் குவைத் மண்டலத்திற்கு வழங்கியது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக