அஸ்ஸாம் மாநிலம் கவுஹாத்தியில் ஆர்எஸ்எஸ் பள்ளியில் பயின்று முதல் மதிப்பெண் பெற்ற இஸ்லாமிய மாணவனுக்கு அரசு 5 லட்சம் ரூபாய் வெகுமதி வழங்கியுள்ளது.
சங்கர்தேவ் சிசு நிகேதன் என்ற ஆர் எஸ் எஸ் அமைப்பால் நிறுவப்பட்ட பள்ளியில் 10ஆம் வகுப்பு பயின்ற ஒரே இஸ்லாமிய மாணவன் SARFARAZ. மாநிலம் முழுதும் 10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் நேற்று வெளியான நிலையில் SARFARAZ , 600க்கு 590 மதிப்பெண்கள் எடுத்து முதல் மாணவனாக வெற்றி பெற்றுள்ளான்.
அவனை ஊக்குவிக்கும் வகையில் 5 லட்சம் ரூபாய் வெகுமதி வழங்கியுள்ள அஸ்ஸாம் அரசு, அவன் பயின்ற ஆர் எஸ் எஸ் பள்ளியின் கட்டமைப்பு வசதியை மேம்படுத்த 10 லட்சம் ரூபாய் வழங்கியுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக