Breaking News
recent

துபாயில் நடைபெற்ற சர்வதேச திருக்குர்ஆன் போட்டியில் சவூதி இளைஞர் சாதனை.!


துபாயில் ரமலான் மாதத்தில் வழக்கமாக நடைபெற்று வரும் சர்வதேச திருக்குர்ஆன் விருது வழங்கும் போட்டி 20 வது ஆண்டாக ஜூன் 6 ல் தொடங்கியது. 

இதில் இந்தியா, இலங்கை, ஆப்பிரிக்க நாடுகள், சவூதி, கத்தார், பங்களதேஷ், ஏமன், யூகே, புருனை, ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட 81 நாடுகளைச் சார்ந்த போட்டியாளர்கள் கலந்துகொண்டனர்.

தினமும் இரவில் நடைபெற்ற வந்து போட்டிகளின் முடிவுகள் நேற்று இரவு அமீரக அமைச்சர்கள், உயர் அதிகாரிகள் முன்னிலையில் வெளியிடப்பட்டது. 

இதில் சவூதி அரேபியா நாட்டை சேர்ந்த துர்கி பின் முக்ரின் பின் அஹமது அல்அப்துல்முனிம் ( Turki bin Muqrin bin Ahmed Alabdulmunim ) ( வயது 20 ) முதல் பரிசை பெற்றார். அவர் 250,000 திர்ஹமை பரிசுத் தொகையாக பெற்றார். 

இரண்டாம் இடத்தை இருவர் பெற்றனர். தகஸ்சதான் நாட்டைச் சேர்ந்த பிலால் அப்துல் கலீல்கோ ( Bilal Abdulkhalikov from Dagestan ) ( வயது 17 ) மற்றும் அமெரிக்கா நாட்டை சேர்ந்த அடின் ஷாஜாத் ரஹ்மான் ( Adeen Shahzad Rehman ) ( வயது 14 )  இருவருக்கும் தலா 200,000 திர்ஹம் பரிசு தொகை வழங்கப்பட்டது.

அடுத்தடுத்த இடங்களை பெற்றுள்ள சாதனையாளர்கள் விவரங்கள்:
Abdulrahman Abduljalil (Libya), Abdullah Al Mamun (Bangladesh), Ibrahim Ismael (Niger), Ekaha Beitate (Mauritania), Toufiq Abdelli (Algeria), Jasim Khalifa (Bahrain) and Malek Adnan (Jordan) ஆகியோர் ஆவார்.
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.