உத்திரப்பிரதேசத்தில் முஸ்லீம் கைதிகளுடன் இணைந்து இந்துக் கைதிகளும் ரமலான் நோன்பு இருந்து வருகின்றனர்.
மத நல்லிணக்கத்தை வலுப்படுத்தக் கூடிய வகையிலான இந்த செயல் பலரிடமும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
உத்திரப்பிரதேச மாநிலம் முசாபர் நகரில் உள்ள மாவட்ட சிறையில் 1150 முஸ்லீம் கைதிகள் உள்ளனர். இவர்கள் தற்போது ரமலான் நோன்பு இருந்து வருகின்றனர்.
இவர்களுடன் சேர்ந்து அங்குள்ள 65 இந்துக் கைதிகளும் தினசரி நோன்பைக் கடைப்பிடித்து வருகின்றனர்.
ரமலான் நோன்பின் முதல் நாளான நேற்று முஸ்லீம் கைதிகளுடன் இந்துக் கைதிகளும் நோன்பு கடைப்பிடித்ததாக ஜெயிலர் சதீஷ் திரிபாதி தெரிவித்துள்ளார்.
கைதிகள் நோன்புக் காலத்தின்போது தொழுகை நடத்த வசதியாக சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும், இதில் எந்தக் குறையம் இல்லாத வகையில் சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருப்தாகவும் ஜெயிலர் திரிபாதி தெரிவித்தார்.
மத நல்லிணக்கத்தை வலுப்படுத்தக் கூடிய வகையிலான இந்த செயல் பலரிடமும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
உத்திரப்பிரதேச மாநிலம் முசாபர் நகரில் உள்ள மாவட்ட சிறையில் 1150 முஸ்லீம் கைதிகள் உள்ளனர். இவர்கள் தற்போது ரமலான் நோன்பு இருந்து வருகின்றனர்.
இவர்களுடன் சேர்ந்து அங்குள்ள 65 இந்துக் கைதிகளும் தினசரி நோன்பைக் கடைப்பிடித்து வருகின்றனர்.
ரமலான் நோன்பின் முதல் நாளான நேற்று முஸ்லீம் கைதிகளுடன் இந்துக் கைதிகளும் நோன்பு கடைப்பிடித்ததாக ஜெயிலர் சதீஷ் திரிபாதி தெரிவித்துள்ளார்.
கைதிகள் நோன்புக் காலத்தின்போது தொழுகை நடத்த வசதியாக சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும், இதில் எந்தக் குறையம் இல்லாத வகையில் சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருப்தாகவும் ஜெயிலர் திரிபாதி தெரிவித்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக