அந்த எமிரேட்ஸ் போயிங் 777 விமானத்தில் பயணித்த பயணிகள் அனைவரும் அச்சமயம் தமது விமானத்தில் குண்டுத் தாக்குதல் ஒன்று இடம்பெற்று விமானம் வெடித்துச் சிதறப் போவதாக பீதி அடைந்துளனர்.
பர்மிங்ஹாமில் சால்ட்லி எனும் இடத்தைச் சேர்ந்த சல்வார் என்ற சுருக் கப் பெயரால் அழைக்கப்படும் அந்தப் பயணி (38 வயது), இவ்வாறு கூச்சலிடுவதற்கு முன்னர் விமானத்தில் பாதுகாப்பு பட்டியை அணிய மறுத்து விமானப் பணியாளர்களுடன் தகராற்றில் ஈடுபட்டதாக
தெரிவிக்கப்படுகிறது.
அத்துடன் அவர் தனது கைகளால் தனது தலையில் அடித்துக் கொண்டுள்ளார்.
இந்நிலையில் விமானத்திலிருந்த பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் அந்த நபரை மடக்கிப் பிடித்து நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.தொடர்ந்து விமானம் பிர்மிங்ஹாமில் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டது.
சல்வார் தனது பாட்டியின்மரணத்தால்மனப்பாதிப்புக்குள்ளாகியிருந்ததாகவும் சம்பவ தினம் தனது மன பதற்றத்தை தணிவிப்பதற்கான மருந்தை அவர் உட்கொள்ளாமையே இந்தக் குழப்பத்திற்கு காரணம் எனவும் அவரது சட்டத்தரணி தெரிவிக்கிறார்.
அவர் மீதான வழக்கு விசாரணை எதிர்வரும் ஜூலை மாதம் முதலாம் திகதி பிர்மிங் ஹாம் நீதிமன்றத்தில் இடம்பெறவுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக