Breaking News
recent

துபாயிலிருந்து பிரித்தானியா பறந்த விமானத்தில், நடுவானில் முதியவர் மரணம்.!


துபாய் நாட்டிலிருந்து பிரித்தானியா நாட்டிற்கு பறந்த விமானத்தில் பயணி ஒருவர் உடநலக்குறைவால் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

துபாய் சர்வதேச விமான நிலையத்திலிருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு எமிரேட்ஸ் என்ற விமானம் இன்று காலை பிரித்தானியா நாட்டிற்கு புறப்பட்டுள்ளது.

விமானத்தில் கிரேட்டர் மான்செஸ்ட்டர் நகருக்கு பயணமான முதியவர் ஒருவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், இன்று உள்ளூர் நேரப்படி 7.30 மணியளவில் விமானம் தரையிறங்கியுள்ளது. தயாராக இருந்த மருத்துவர்கள் பயணியை விரைந்து வந்து சோதனை செய்துள்ளனர்.

ஆனால், விமானம் பறந்தபோதே அவர் உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.

மேலும், விமானத்தில் ஏறுவதற்கு முன்னதாகவே அவருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த உயிரிழப்பு விவாகரத்தில் சதி வேலை எதுவும் இல்லை என பொலிசார் தெரிவித்துள்ளனர்.

இதே போல், பயணி விமானத்திலேயே உயிரிழந்த சம்பவத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ள எமிரேட்ஸ் விமான நிறுவனம், இந்த உயிரிழப்பில் விமான நிறுவனத்திற்கு எந்த பொறுப்பும் இல்லை என தகவல் வெளியிட்டுள்ளது.
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.