இங்கு தமிழக சுவையுடன் கூடிய நோன்பு கஞ்சி தினமும் வழங்கப்படுகிறது.
நிகழ்விடத்திற்கு வருகை தந்த வளைகுடா பிரமுகர்கள் ஆதில் சகி மஹ்ம்து அல் பலூஸி மற்றும் நபீல் கைத் ஆகியோர் ஈமான் பல்வேறு நாடுகளை சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் ஒன்றாக அமர்ந்து நடைபெறும் இப்தார் நிகழ்வை வெகுவாக வரவேற்று பேசினர்.
அவர்கள் கூறியதாவது , தமிழகத்தை சேர்ந்தோர் நிர்வாகிகளாக இருந்து நடத்தும் ஈமான் கல்ச்சுரல் சென்டரின் இந்த சேவை பாராட்டுக்குறியது தமிழர்கள் விருந்தோம்பலில் சிறந்தவர்கள்.
மேலும் இந்த இப்தார் நிகழ்ச்சி நாடு, மொழிகளை கடந்து இதயங்களை ஒருங்கினைக்கிறது என்றனர்.
அவர்களோடு வருகை தந்த துபாய் டி டி எஸ் நிர்வாகிகளில் ஒருவரான ஜெயந்தி மாலா சுரேஷும் ஈமானின் சேவையை பாராட்டினார்.
முன்னாள் எம்பி அப்துல் ரஹ்மான் இநிகழ்ச்சி ஏற்பாடுகள் குறித்தும் ஈமான் செயல்பாடுகள் குறித்து விளக்ககினார்.
ஈமான் பொது செயலாளர் குத்தாலம் லியாக்கத் அலி, துணை பொது செயலாளர் தாஹா, செயலாளர்கள் அப்துல் ரசாக் ,ஹமீது யாசின், சாதிக் உள்ளிட்ட குழுவினர் வரவேற்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக