சவுதி அரேபியாவில் சவேரா என அழைக்கப்படும் முகாமில் எவ்வித உதவியும் இல்லாமல் 70க்கும் அதிகமான தமிழக பெண்கள் இருப்பது தெரியவந்துள்ளது.
சவுதியில் வீட்டு வேலைக்காகச் செல்லும் பெண்கள் பல்வேறு சித்திரவதைகளுக்கு ஆளாவதாக, அங்கிருந்து மீண்டு வந்த கூடலூர் பெண் குற்றம்சாட்டியிருந்தார்.
அவர் கூறியதை உறுதி செய்யும் வகையில், சவுதியின் சவேரா முகாம் காட்சிகள் சில வாட்ஸ் அப்பில் புதியதலைமுறைக்கு கிடைத்துள்ளது. அதில் பேசும் பெண்கள், வீட்டு வேலை செய்த போது உணவு, ஊதியம் இல்லாமல் அடி, உதைக்கு ஆளாகியதாக கூறுகின்றனர்.
சவுதி உரிமையாளரிடம் இருந்து தப்பி இந்திய தூதரகத்தில் தஞ்சம் அடைபவர்கள் சவேராவிற்கு அனுப்பி வைக்கப்படுவதாகவும், அங்கு எந்த அடிப்படை வசதியும் இல்லாமல் அடைத்து வைக்கப்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்ட பெண்கள் கூறுகின்றனர்.
தமிழக பெண்கள் மட்டுமின்றி இந்தியாவின் பிற பகுதிகளைச் சேர்ந்த 150க்கும் அதிகமானோர், சவுதியில் சிக்கியுள்ளதாகத் தெரிகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக