Breaking News
recent

மியன்மார் பள்ளிவாயல் தாக்குதலை தொடர்ந்து கடும் அச்சத்துடன் காலத்தை கழிக்கும் மியன்மார் முஸ்லீம்கள்.!


மியன்மார் போகோ பிராந்தியத்தின் தூ யே தா என்ற முஸ்லிம்கள் அதிகமாக வசிக்கும் ஊரில் வசித்து வந்த ஊரில் பள்ளிவாயல் மீது தாக்குதல்

 மேற்கொள்ளப்பட்ட நிலையில் அங்குள்ள மக்கள் தங்கள் சொந்த இடங்களில் கடும் அச்சத்துடன் காலம் கழித்துவருவதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

ஏற்கனவே ஆயிரக்கணக்கில் முஸ்லீம்களை அகதிகளாக்கிய சரித்திரத்தை கொண்ட மியன்மாறில் பள்ளிவாயல் தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து முஸ்லீம்கள் தாக்கப்படுவார்கள்

 என்ற வதந்தி பரப்ப பட்டுள்ளதாலே முஸ்லீம்கள் அச்சமடைந்துள்ளதாகவும் பாதுகாப்பிற்காக மேலதிக பொலிஸாரை பணியமர்தியுள்ளதாக மியன்மார் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வியாழன் அன்று அப்பிரதேசத்தில் முஸ்லிம் பாடசாலை நிர்மாணிப்பதில் ஏற்பட்ட வாக்குவாதம் முற்றியதை தொடர்ந்து 200 க்கும் அதிகமான பௌத்த கடும்போக்குவாதிகள் அப்பிரதேச பள்ளிவாயல் மீது தக்குதல் நடத்தியுள்ளதுடன் முஸ்லீம்களை விரட்டியடிதுள்ளனர்.

தற்போது அங்குள்ள முஸ்லீம்களுக்கு பொலிஸார் பாதுகாப்பு வழங்கியுள்ளதாக கூறியுள்ளபோதும் அங்குள்ள முஸ்லீம்கள் தொடர்ந்து அச்சத்துடன் காலம் கழித்துவருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.