Breaking News
recent

விரைவில் ரேஷன் கடைகளில் ஆதார் எண்களைப் பெறுவதற்கான ஸ்கேனிங் முறை.!


தமிழகத்தில் நியாயவிலைக் கடைகளில் ஆதார் எண்களை பெறுவதற்கு ஸ்கேனிங் முறை அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளதாக,  உணவுத் துறை தெரிவித்துள்ளது.

தமிழகம் முழுவதும் உள்ள நியாய விலைக் கடைகளில் தற்போது குடும்ப அட்டைதாரர்களிடம் ஆதார் எண்கள் பெறப்பட்டு வருகின்றன. 


இந்நிலையில் இப்பணியை மேலும் சுலபமாக்க, தமிழகம் முழுவதும் தற்போது முதற்கட்டமாக 12 ஆயிரம் கடைகளில் ஸ்கேனர்கள் மூலமாக ஆதார் அட்டை எண்களை பெறும் பணி தொடங்கியுள்ளது. 

இதன் மூலம் ஆதார் அட்டைகளின் எண்கள் பிழை இல்லாமல் பதிவு செய்ய வாய்ப்பு உள்ளதாக, உணவுத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். 


மேலும் ஸ்மார்ட் குடும்ப அட்டைகள் வழங்கும் பணிக்காக தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் ஆதார் அட்டையுடன் இணைக்கும் பணிகள் நடைபெற்று வருவதாகவும், விரைவில் தமிழகம் முழுவதும் விரிவுபடுத்தப்படும் என்றும் உணவுத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.