Breaking News
recent

கத்தாரில் துஷ்பிரயோகத்திற்கு உள்ளான பெண்ணுக்கு சிறைத்தண்டனை.!


கடந்த மார்ச் மாதம் தோஹா நகரில் விடுதியொன்றில் போதைப்பொருள் வழங்கப்பட்டு துஷ்பிரயோகத்திற்கு உள்ளான நெதர்லாந்தை சேர்ந்த பெண்ணுக்கு, விபச்சாரத்தில் ஈடுபட்டார் என தீர்மானித்து கடார் நீதிமன்றம் இடைநீக்க சிறைத்தண்டனை வழங்கி தீரப்பளித்துள்ளது.

அதேபோல் ,22 வயதான குறித்த பெண்ணுக்கு 824 டொலர் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக வௌிநாட்டு ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.

அவரை துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கிய சந்தேக நபருக்கு , 140 கசையடிகள் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குறித்த பெண் சுய விருப்பத்துடனே தன்னிடம் வந்ததாக சந்தேக நபர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.