Breaking News
recent

சவுதியில் இறந்தவரின் உடலை தாயகம் கொண்டு வர நடிவடிக்கை கோரும் குடும்பத்தினர்.!


சவுதியில், துப்புரவு பணிக்கு சென்று கார் விபத்தில் பலியான கோபாலின் உடலை சொந்த ஊர் கொண்டுவர நடவடிக்கை எடுக்குமாறு, மத்திய மாநில அரசுகளுக்கு அவரது குடும்பத்தினர் கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளனர்.

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகேயுள்ள ராமசாமிப்பட்டியைச் சேர்ந்த கோபால் சவுதி அரேபியாவில் துப்புரவு பணியாளராக பணியாற்றி வந்தார். 

ரியாத் நகரில் கடந்த 3 நாட்களுக்கு முன்னர் துப்புரவு பணியில் ஈடுபட்டிருந்த கோபால் மீது, மின்னல் வேகத்தில் வந்த கார் மோதியது. 

இதில் படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து கோபாலுடன் பணிபுரிந்தவர்கள் வாட்ஸ்-அப் மூலம் அவரது வீட்டுக்கு புகைப்படங்களை அனுப்பியுள்ளனர். 

இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த கோபாலின் குடும்பத்தினர், அவரது உடலை சொந்த ஊர் கொண்டுவர நடவடிக்கை எடுக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளனர். 
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.