ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகேயுள்ள ராமசாமிப்பட்டியைச் சேர்ந்த கோபால் சவுதி அரேபியாவில் துப்புரவு பணியாளராக பணியாற்றி வந்தார்.
ரியாத் நகரில் கடந்த 3 நாட்களுக்கு முன்னர் துப்புரவு பணியில் ஈடுபட்டிருந்த கோபால் மீது, மின்னல் வேகத்தில் வந்த கார் மோதியது.
இதில் படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து கோபாலுடன் பணிபுரிந்தவர்கள் வாட்ஸ்-அப் மூலம் அவரது வீட்டுக்கு புகைப்படங்களை அனுப்பியுள்ளனர்.
இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த கோபாலின் குடும்பத்தினர், அவரது உடலை சொந்த ஊர் கொண்டுவர நடவடிக்கை எடுக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக