Breaking News
recent

மதுரை - சென்னை - கோவை இடையே புதிய விமான சேவையை தொடங்கும் 'ஏர் கார்னிவல்.!


கோவையை தலைமை இடமாக கொண்டு செயல்படும் 'ஏர் கார்னிவல்' விமான நிறுவனம், விரைவில் மதுரை - சென்னை - ஜோவை இடையே விமான சேவையை துவக்க உள்ளது.

கோவையைச் சேர்ந்த சி.எம்.சி. கல்வி நிறுவனம் சார்பில் ஏர் கார்னிவல் என்ற விமானப் போக்குவரத்து நிறுவனம் தொடங்கப்பட்டுள்ளது.

தினமும் இருமுறை இயக்கப்படும் இந்த விமான சேவை, காலை 10.15 மணிக்கும், இரவு 8.15 மணிக்கும் மதுரையில் புறப்பட்டு சென்னை விமான நிலையம் சென்றடையும். 


அதே போல சென்னையில் இருந்து காலை 8.15 மணிக்கும், மாலை 6.30 மணிக்கும், இந்த விமானம் மதுரைக்கு இயக்கப்படும் என்றும் அறிவிக்கப்படுள்ளது.

இதே போல சென்னை, கோவை இடையே இருமார்க்கத்திலும் ஏர் கார்னிவல் சேவையை விரைவில் தொடங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது

பிரான்சில் வடிவமைக்கப்பட்ட  ATR - 72-500 வகை விமாங்களை பயன்படுத்த போவதாகவும், இதில் 70 பேர் பயணம் செய்யலாம் என்றும் 'ஏர் கார்னிவல்' விமான நிறுவனம் அறிவித்துள்ளது.

பொழுதுபோக்கு, இலவச உணவு போன்ற வசதிகளுடன் தங்களது விமானங்கள் இயங்கும் என்று நிறுவனத்தின் தலைமைச் செயல் இயக்குநர் மனீஸ் குமார் சிங் தெரிவித்துள்ளார்.
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.