Breaking News
recent

முகமது அலி மறைவையொட்டி தஞ்சாவூரில் இரங்கல் ஊர்வலம்.!


உலகப் புகழ் பெற்ற குத்துச் சண்டை வீரர் முகமது அலி மறைவையொட்டி, தஞ்சாவூரில் பல்வேறு கட்சிகள், இயக்கங்கள் சார்பில் இரங்கல் ஊர்வலம் வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது.

ரயிலடியில் புறப்பட்ட இந்த ஊர்வலம் காந்திஜி சாலை வழியாகப் பழைய பேருந்து நிலையத்தில் முடிவடைந்தது.

 பின்னர், நடைபெற்ற புகழஞ்சலிக் கூட்டத்துக்குத் தமிழர் தேசிய முன்னணி பொதுச் செயலர் அய்யனாபுரம் சி. முருகேசன் தலைமை வகித்தார்.

இதில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டப் பொருளாளர் என். பாலசுப்பிரமணியன், ஐ.ஜே.கே. மேற்கு மாவட்டத் தலைவர் ச. சிமியோன் சேவியர்ராஜ்,

 மூத்தோர் குடிமக்கள் பேரவை மாவட்டத் தலைவர் ஆதி. நெடுஞ்செழியன், ஏ.ஐ.டி.யு.சி. மாவட்டத் தலைவர் வெ. சேவையா, துணைச் செயலர் துரை. மதிவாணன்,

 தஞ்சை இலக்கிய வட்ட ஒருங்கிணைப்பாளர் செ. சண்முகசுந்தரம், தொலைத்தொடர்பு ஊழியர் சங்க மாநிலச் செயலர் கே. நடராஜன், விடுதலைத் தமிழ்ப் புலிகள் கட்சி மாநகரச் செயலர் வெற்றி, பேராசிரியர் வி. பாரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.