ஜிஷாவின் படுகொலைக்கு நீதிகேட்டு போராடியது முதல் இறுதி வரை உறுதுணையாக இருந்தது வரை கேரளாவை சேர்ந்த இஸ்லாமியர்களின் பங்கு மகத்தானது.
அதனைத்தொடர்ந்து ஜிஷாவின் பெற்றோர் ஏழ்மை நிலையில் இருப்பதை கண்ட ஓமன் நாட்டில் தொழிலதிபராக இருக்கும் கேரளாவை சேர்ந்த டாக்டர் ரபியுல்லாஹ் ஐந்து சென்ட் நிலமும், அந்த இடத்தில் வீடு கட்டிக்கொள்ள ரூ 3 லட்சம் ரொக்கமும் நிதியுதவியாக வழங்கியுள்ளார்.
இதுதொடர்பாக ரபியுல்லாஹ் கூறுகையில்...
ஜிஷாவின் லட்சியம் வக்கீலாக ஆகி சொந்தமாக வீடு கட்ட வேண்டும் என்று நண்பர்களிடத்தில் கூறியுள்ளார். அவரது ஆசையாயவது நாம் நிறைவேற்ற வேண்டும் என்று கூறினார்.
தனது நாட்டு சகோதரியின் கடைசி ஆசையையாவது நிறைவேற்ற துடிக்கும் இதற்கு பெயர்தான் தேசப் பற்று...
ஜிஷா தலித் சமூகத்தை சேர்ந்தவர் என்பதால் மதத்தின் பெயரால் ஆட்சியை பிடித்துள்ள பாஜக கூடாரங்கள் கள்ள மௌனம் காத்த வேளையிலும் இஸ்லாமியர்கள் ஜிஷாவை தலித் என்றோ, இந்து என்றோ, முஸ்லிம் என்றோ, கிறித்தவர் என்றோ பார்க்காமல் சக சகோதரியாகவே பார்த்தார்கள். இறுதிவரை அவரது மரணத்திற்கு நீதிகேட்டு போராடினார்கள்.
இது தான் இஸ்லாம்.....
நன்றி : சுவனப்பிரியன் நஜீர் அஹமது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக