இந்த மருந்தை லக்னோவில் உள்ள தேசிய தாவர ஆராய்ச்சி நிறுவனம் (என்.பி.ஆர்.ஐ) மற்றும் மத்திய மூலிகை தாவர ஆராய்ச்சி மையம் (சி.ஐ.எம்.ஏ.பி) இணைந்து உருவாக்கியுள்ளது.
இந்த மருந்தை உருவாக்குவதற்காக 500-க்கும் மேற்பட்ட பழங்கால ஆயுர்வேத மருத்துவ குறிப்புகளை இந்த இரண்டு ஆராய்ச்சி நிறுவனங்களும் அலசி ஆராய்ந்துள்ளது.
குறிப்பாக, தருகரித்ரா, கிலோய், விஜய்ஸார், குத்மார், மாஜீத், மெதிகா உள்ளிட்ட மூலிகைகளை கொண்டு இந்த ஆன்டி-டயாபடிக் மருந்து உருவாக்கப்பட்டுள்ளது.
சர்க்கரை நோயை கட்டுப்படுத்துவதற்காக உள்ள நவீன மருந்துகள் பக்கவிளைவுகளை கொண்டதாக உள்ளன. ஆனால், பி.ஜி.ஆர்-34 ஆயுர்வேத மருந்து இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுக்குள் கொண்டு வருகிறது.
மற்ற மருந்துகளை போல பக்கவிளைவுகள் ஏதும் இதில் இருக்காது என தேசிய தாவர ஆராய்ச்சி நிறுவனத்தின் மூத்த அறிவியலாளர் ஏ.கே.எஸ்.ராவத் தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக