Breaking News
recent

துபாயில் ரமலானையொட்டி பிச்சை எடுத்த 35 பேர் கைது.!


ரமலான் மாதம் நோன்பிருந்து இறைவனை வழிபடும் மாதம் மட்டுமல்ல, முஸ்லிம்கள் ‘ஜக்காத்’ எனப்படும் தான தர்மங்களையும் அதிகம் செய்யும் மாதம் என்பதால், ரமலான் மாதங்களில் அரபு நாடுகளில் பிச்சை எடுப்பதை ஒரு பிழைப்பாகவே சிலர் நடத்தி வருகின்றனர்.

கடந்த சில நாட்களாகவே துபாய் நகரின் மசூதிகள், மார்க்கெட் பகுதிகள், ஷாப்பிங் மால்கள் மற்றும் பரபரப்பு மிக்க சாலைகளில் பொது மக்களுக்கு இடையூறாக பிச்சை எடுத்துக்கொண்டிருந்த 35 பேரை துபாய் போலீசார் பிடித்துள்ளனர். தற்போது பிடிபட்டவர்களில் 26 ஆண்கள், 7 பெண்கள் 2 குழந்தைகள் ஆவார்.

மேலும் பிச்சை எடுப்பது தெரியவந்தால் 0502106969 or the toll-free number 800 – CID (800 243), or via the department official email: cid@dubaipolice.gov.ae ஆகியவற்றில் தகவல் தெரிவிக்க கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. 
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.