Breaking News
recent

18 வயதுக்கு உட்பட்ட இளஞ்சிறார்கள் வாகனம் ஓட்டினால் ரூ.500 அபராதம்: போக்குவரத்து போலீசார் எச்சரிக்கை.!


சென்னை நகர போக்குவரத்து போலீசார் வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:- 

18 வயதிற்கு கீழ் உள்ள இளஞ்சிறார்கள் சாலையில் வாகனம் ஓட்டினால் மத்திய மோட்டார் வாகன விதியின்படி வழக்குப் பதிவு செய்து ரூ.500 அபராதம் விதிக்கப்படுகிறது. 

மேலும், இளஞ்சிறார்கள் ஓட்டும் வாகனத்தின் உரிமையாளர்கள் மீதும் வழக்குப்பதிவு செய்து ரூ.500 அபராதமாக விதிக்கப்படுகிறது. 

எனவே, எக்காரணத்தை முன்னிட்டும் இளஞ்சிறார்கள், வாகனம் ஓட்ட அனுமதிக்கக் கூடாது. கடந்த 2 நாட்களில் மட்டும் சென்னையில் வாகனம் ஓட்டிய இளஞ்சிறார்கள் மீது 165 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டது. 

158 வாகன உரிமையாளர்கள் மீதும் வழக்கு போடப்பட்டது. இதன் மூலம் 1 லட்சத்து 58 ஆயிரத்து 600 ரூபாய் அபராதத் தொகையாக வசூலிக்கப்பட்டது. 

இவ்வாறு செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.