ஏர் இந்தியா மட்டும் 23 கிலோ வரை கட்டணமின்றி எடுத்துச்செல்ல அனுமதிக்கிறது.இதற்கு அதிகமாக உடமைகளை பயணிகள் எடுத்து செல்கிறபோது ஒரு கிலோவுக்கு ரூ.300 வீதம் வசூலிக்கப்படுகிறது.
இது அதிகம் என பயணிகள் குறை கூறி வந்தனர். இது தொடர்பாக அரசின் கவனத்துக்கும் எடுத்துச்செல்லப்பட்டது.
இதையடுத்து விமான பயணிகளின் கோரிக்கை ஏற்கப்பட்டுள்ளது.இனி இலவச அனுமதியை கடந்து எடுத்து செல்கிற உடமைகளுக்கு ஒவ்வொரு கிலோவுக்கும் தற்போதைய ரூ.300–க்கு பதிலாக ரூ.100 மட்டுமே வசூலிக்கப்படும்.
இந்த சலுகை 20 கிலோ வரையில்தான்.அதற்கு அதிகமான எடை கொண்ட உடமைகளை பயணிகள் எடுத்து வருகிறபோது அதற்கு விமான நிறுவனங்கள் தங்கள் இஷ்டம் போல கட்டணம் நிர்ணயித்து கொள்ளலாம்.
இந்த கட்டண குறைப்பு குறித்த தகவல்களை வெளியிட்ட சிவில் விமான போக்குவரத்து தலைமை இயக்குனர் சதியவதி, இது வரும் 15–ந் தேதி முதல் அமலுக்கு வருவதாக தெரிவித்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக