Breaking News
recent

121–வது பிறந்த நாள்: காயிதே மில்லத் நினைவிடத்தில் மலர்ப் போர்வை அ.தி.மு.க. சார்பில் 5–ந் தேதி மரியாதை.!


அ.தி.மு.க. தலைமைக் கழகம் சார்பில் நேற்று வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:–

கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் இஸ்மாயில் சாஹிப்பின் 121–வது பிறந்தநாளை முன்னிட்டு, 5–ந்தேதி(ஞாயிற்றுக்கிழமை) காலை 9 மணி அளவில், சென்னை, 

திருவல்லிக்கேணி நெடுஞ்சாலை, வாலாஜா மசூதியில் அமைந்துள்ள கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் நினைவிடத்தில், அ.தி.மு.க. அவைத் தலைவர் இ.மதுசூதனன் தலைமையில், தலைமைக் கழக நிர்வாகிகளும், அமைச்சர்களும், அ.தி.மு.க. பாராளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களும் மலர்ப் போர்வை போர்த்தி மரியாதை செலுத்துவார்கள்.

இந்த நிகழ்ச்சியில், அ.தி.மு.க., எம்.ஜி.ஆர். மன்றம், ஜெயலலிதா பேரவை, எம்.ஜி.ஆர். இளைஞர் அணி, மகளிர் அணி, மாணவர் அணி, அண்ணா தொழிற்சங்கம், வழக்கறிஞர் பிரிவு, 

சிறுபான்மையினர் நலப் பிரிவு, விவசாயப் பிரிவு, மீனவர் பிரிவு, மருத்துவ அணி, இலக்கிய அணி, அமைப்பு சாரா ஓட்டுனர்கள் அணி, இளைஞர் பாசறை, 

இளம் பெண்கள் பாசறை மற்றும் தகவல் தொழில்நுட்பப் பிரிவு உட்பட கட்சியின் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த நிர்வாகிகளும், 

உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் கூட்டுறவு சங்கங்களின் பிரதிநிதிகளும், அ.தி.மு.க. தொண்டர்களும் பெருந்திரளாக கலந்துகொண்டு மரியாதை செலுத்துவார்கள்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.