Breaking News
recent

உடல் ஊனத்தை காரணம் காட்டி 11ம் வகுப்பில் சேர மாணவிக்கு அரசு பள்ளி மறுப்பு.!


உடல் ஊனத்தை காரணம் காட்டி பதினொன்றாம் வகுப்பில் சேர்க்க அனுமதி மறுப்பதாக புகார் தெரிவித்து மாற்றுத்திறனாளி மாணவி ஒருவர், மதுரை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளார்.  

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே மேட்டுநீரேந்தான் கிராமத்தை சேர்ந்த மாற்றுத்திறனாளி மாணவி திவ்யா, பத்தாம் வகுப்பில் 303 மதிப்பெண்கள் எடுத்துள்ளார். 


பதினொன்றாம் வகுப்பில் சேர வாடிப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளிக்கு சென்ற போது, செய்முறை தேர்வுக்கு கூடுதல் நேரம் எடுத்து கொள்வார் என காரணம் காட்டி, திவ்யாவுக்கு சேர்க்கை அளிக்க பள்ளி நிர்வாகம் அனுமதி மறுத்து விட்டதாக கூறப்படுகிறது.

மேலும் மாவட்ட கல்வி அலுவலர் அனுமதி வழங்கினால் பள்ளியில் சேர்த்து கொள்வதாகவும் கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் 11 ஆம் வகுப்பு சேர்வதற்கு  மாவட்ட கல்வி  நிர்வாகம் அனுமதி அளிக்க மறுத்து விட்டதாக தெரிகிறது. 


இதனையடுத்து படிப்பதற்கு ஆர்வமாக உள்ள தம்மை பள்ளியில் சேர அனுமதிக்க வேண்டும் என திவ்யா, தனது தந்தையுடன் வந்து மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தார்.
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.