Breaking News
recent

கத்தாரில் தீ விபத்து 11 தொழிலாளர்கள் பலி.!


கத்தாரில் கடந்த புதன்கிழமை இரவு இடம்பெற்ற தீ விபத்தொன்றில் 11 தொழிலாளர்கள் கொல்லப்பட்டிருப்பதாக கட்டார் உள்துறை அமைச்சு உறுதிப்படுத்தி இருக்கின்றது. 

சல்வா சுற்றுலா திட்டத்தில் வேலை செய்யும் தொழிலாளர்களின் தங்குமிடத்தில் ஏற்பட்ட தீ விபத்திலேயே மேற்படி 11 பேர் பலியானதுடன், 12 பேர் காயமடைந்துள்ளனர்.

பலியானவர்களுள் அதிகமானோர் தெற்காசிய நாட்டைச் சேர்ந்தவர்கள் என கட்டார் உள்துறை அமைச்சு பொதுவாககக் கூறி இருந்தாலும், பலியானவர்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பதை இதுவரை அறிவிக்கவில்லை.

பலியானவர்களின் சடலங்கள் அபு ஸம்ரா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக கட்டார் உள்துறை அமைச்சு தெரிவித்திருக்கிறது.
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.