பெங்களூரில் உள்ள கெம்பேகவுடா இண்டர்நேஷனல் விமான நிலையத்தை அடிப்படையாக கொண்டு செயல்படும் ஏர் பிகாசஸ் நிறுவனம், பெங்களூரில் இருந்து மதுரைக்கு மாலை நேரத்தில் மட்டும் ஒரு விமானத்தை இயக்கி வருகிறது.
கடந்த ஓராண்டாக பயணிகள் விடுத்த கோரிக்கையை அடுத்து தற்போது காலையிலும் விமானத்தை இயக்குவதற்கு ஏர் பிகாசஸ் முடிவு செய்துள்ளது.
இது குறித்து அந்நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில், அறிமுக சலுகையாக மதுரையில் இருந்து பெங்களூர் செல்ல ஒரு வழிக்கட்டணமாக 1,599 ரூபாய் வசூலிக்கப்படுமென்றும், இருவழிகட்டணமாக 2,999 ரூபாய் வசூலிக்கப்படும் என்றும் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
மேலும் கூடுதலாக தூத்துக்குடி, பெல்காம், ராஜமுந்திரி மற்றும் பாண்டிச்சேரிக்கும் விமான சேவையை துவக்கியிருப்பதாகவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக