Breaking News
recent

சென்னையில் ஐ.ஏ.எஸ். தேர்வர்களுக்கான இலவச வழிகாட்டுதல் முகாம்.!


ஐ.ஏ.எஸ். தேர்வுக்கு தயாராக விரும்பும் இளம் தேர்வர்களுக்கான இலவச வழிகாட்டுதல் முகாம் மே 29 ஆம் தேதி சென்னையில் நடத்தப்பட உள்ளது.

  இது தொடர்பாக போக்கஸ் ஐ.ஏ.எஸ். அகாதெமியின் இயக்குநர் மு.சிபிகுமரன் புதன்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:  சென்னை அண்ணா நகரை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் போக்கஸ் ஐ.ஏ.எஸ். அகாதெமி நிறுவனம் மதுரை, ராமநாதபுரம் ஆகிய இடங்களில் தனது கிளைகளுடன் செயல்பட்டு வருகிறது. 

இதில் படித்து அண்மையில் நேர்முகத் தேர்வுக்கு சென்ற 24 பேரில் 9 பேர் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளனர். இம்மாதம் 29 ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) சென்னை அண்ணாநகரில் உள்ள அகாதெமியின் தலைமை அலுவலகத்தில் ஐ.ஏ.எஸ். தேர்வுக்கு தயாராக விரும்பும் இளம் தேர்வர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக, வழிகாட்டுதல் முகாம் நடைபெறுகிறது. 

இம்முகாமில்  அண்மையில் தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்கள் பங்கேற்று, குடிமைப்பணித் தேர்வர்களுக்கான பாடக்குறிப்பேடுகளைத் தேர்வு செய்யும் விதம், நேர மேலாண்மை சம்பந்தமான விளக்கங்களை வழங்க இருக்கிறார்கள். 

இதில் கலந்து கொள்ள கட்டணம் ஏதுமில்லை. பங்கு பெற விரும்பும் தகுதியுள்ள மாணவர்கள் தங்களது பெயர்களை முன்பதிவு செய்து கொள்ள அகாதமியின் இயக்குநரை 94427 22537 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என அச்செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.