அமெரிக்காவின் மிசோரி மாகாணத்தில் உள்ள கேப் கிரார்டேயு பகுதியைச் ேசர்ந்த தம்பதி சாரா இலர்- மட்ரைடர்.
கர்ப்பிணியான தனது மனைவியுடன் மட்ரைடர் கடந்த புதன்கிழமை வீட்டில் இருந்து போலார் பிளப் பகுதியில் உள்ள மருத்துவமனைக்கு காரில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது அவர்களின் கார் மீது டிராக்டர் ஒன்று மோதியது. இதில் தம்பதி காயம் அடைந்தனர்.
இதையடுத்து போலீசார் விரைந்து வந்து அவர்களை மீட்டனர். சாரா இலரை மீட்டு கேப்கிரார்டேயு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
ஆனால் அங்கு அந்த பெண் இறந்தார். இதையடுத்து டாக்டர்கள் அந்த பெண்ணை அவசர சிகிச்சை பிரிவில் சேர்த்து சிசேரியன் மூலம் குழந்தையை வெளியே எடுத்தனர்.
அப்போது அவருக்கு 2 கிலோ எடையில் அழகான பெண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தையை வெண்டிலேட்டரில் பாதுகாத்து வருகின்றனர்.
ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக குழந்தைக்கு மூளையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதா என்பது குறித்து ஆய்வு செய்யப்படுகிறது.
ஆனாலும் குழந்தை நலமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
விபத்தில் எலும்பு முறிவு ஏற்பட்ட மட்ரைடர், மேல் சிகிச்சைக்காக செயிண்ட் லூயிஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக