Breaking News
recent

இலங்கையில் மனிதாபிமானப் பணிகளில் பங்கேற்ற சவுதி இளைஞர்கள்.!


அண்மைய இயற்கை அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு மனிதாபிமானப் பணிகளை அல்-கிம்மா சமூக சேவை அமைப்பு தொடர்ந்து வருகிறது.

இதன் தொடர்ச்சியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட வெல்லம்பிட்டிய கொலன்னாவ மக்களுக்கும் உதவிகள் வழங்கப்பட்டடதுடன் சுமார் 300 குடும்பங்களுக்கு உலர்உணவு, பாய், தலையணை உள்ளிட்ட பொருட்களையும் பாடசாலை மாணவர்களுக்கான அப்பியாசக் கொப்பிகளும் அமைப்பு சார்பில் வழங்கப்பட்டது.

இதன் போது நிறுவனத்தின் பொதுத்தலைவர் முதீப் தவாப் அஸ்ஸபீயியும் மற்றும் பதினைந்துக்கும் மேற்பட்ட சவூதியரேபிய றியாத் நகரைச் சேர்ந்த சகோதரர்களும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.






VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.