அந்நாட்டில் உள்ள ‘வெட்’ என்ற சிறைச்சாலையில் தான் இந்த விநோத சம்பவம் அரங்கேறி உள்ளது. பாதுகாப்பு சட்டங்களை மீறிய குற்றத்திற்காக கைதான நபருக்கே இந்த ஆடம்பர திருமணம் நடைபெற்றுள்ளது.
இந்த திருமண வைபவத்தில் அந்நாட்டு உள்துறை அமைச்சரான இளவரசர் மொஹமட்பின் நயெப் கலந்துகொண்டு புதிதாக திருமண பந்தத்தில் இணைந்த தம்பதிக்கு பரிசு பொருட்களை வழங்கி மகிழ்வித்துள்ளார்.
இந்த திருமணத்தில் கலந்துகொண்ட உறவினர்களுக்கு சிறை வளாகத்திற்குள்ளாகவே உணவு பரிமாறப்பட்டுள்ளது. தொடர்ந்து தேனிலவு கொண்டாட்டங்களும் நடைபெற்றுள்ளன.
அரபு நாடுகளில் சட்டத்திட்டங்களுக்கு எந்தளவிற்கு அக்கறை காட்டுகிறார்களோ, அதே அளவிற்கு சிறை கைதிகளின் நலனிலும் அக்கறை காட்டுகின்றனர் என்பதை இந்த சம்பவம் நிரூபித்துள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக