இந்த நிலையில் அமெரிக்காவின் ரட்கர் பல்கலைக்கழகத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் ஜனாதிபதி ஒபாமா கலந்து கொண்டு பேசினார். அப்போது முஸ்லிம்களுக்கு எதிரான டிரம்பின் கொள்கைகளை அவர் தாக்கி பேசினார்.
டிரம்பின் பெயரை நேரடியாக குறிப்பிடாமல் ஒபாமா பேசுகையில், ‘நமது நாட்டுக்கு வரும் முஸ்லிம்களை தனிமைப்படுத்துவதும், இழிவுபடுத்துவதும் நமது மதிப்பீடுகள் இல்லை. இது பிரிவினைவாதத்துக்கு எதிரான போராட்டத்தில் நமது மிக முக்கியமான கூட்டாளிகளான அவர்களை அந்நியப்படுத்தி விடும்’ என்றார்.
அரசியலிலும், பொது வாழ்விலும் புறக்கணிப்பு என்பது ஒரு நல்லொழுக்கமாக இராது என்று கூறிய ஒபாமா, ஒன்றுடன் ஒன்று பின்னிப்பிணைந்துள்ள உலகில், இடையே எழுப்பப்படும் சுவர்களால் எதுவும் மாற்ற முடியாது என்று தெரிவித்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக