Breaking News
recent

தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான தபால் வாக்குப்பதிவு தொடங்கியது.!


தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான தபால் வாக்குப்பதிவு தொடங்கியுள்ளது. தேர்தல் பணிகளில் ஈடுபட்டுள்ள அரசு பணியாளர்கள் தபால் மூலம் வாக்குகளை பதிவு செய்ய வரும் 14ஆம் தேதி கடைசி நாளாகும்.
தமிழகத்தில் 5 லட்சத்து 78 ஆயிரம் அரசு பணியாளர்கள் தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் அனைவரும் சட்டமன்றத் தேர்தலுக்கு தபால் மூலம் வாக்களிக்க தகுதியானர்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 
இந்த நிலையில் தபால் வாக்குப்பதிவுக்கான விண்ணப்ப விநியோகமும், வாக்குப்பதிவும் இன்று தொடங்கியுள்ளது. தேர்தல் பணிகளில் ஈடுபட்டுள்ள பலர் இன்று தங்களது தபால் வாக்குகளை பதிவு செய்தனர். தபால் வாக்குப்பதிவுக்கு வரும் 14ஆம் தேதி கடைசி நாளாகும்.
இதுகுறித்து சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட தேர்தல் அதிகாரி சந்திரமோகன், தபால் வாக்குப்பதிவுக்காக படிவம் 12 எல்லா அலுவலர்களுக்கும் வழங்கப்பட்டு வருகிறது என்று தெரிவித்தார்.
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.