Breaking News
recent

ரேசன் கடையில் பொருட்கள் வாங்க பழைய முறையே தொடரும் - உணவுத் துறை அமைச்சர் விளக்கம்.!



தமிழகத்தில் ரேசன் கடையில் பொருட்கள் வாங்குவதற்கு பழைய முறையே தொடரும் என உணவுப் பொருள் விநியோக துறை விளக்கமளித்துள்ளது. 

நியாய விலைக் கடையில் பொருட்கள் வாங்க வரும் சம்பந்தப்பட்ட குடும்ப உறுப்பினர் தவறாது ஆதார் அட்டை கொண்டு வர வேண்டும் என்று உணவுப் பொருள் விநியோக துறை சார்பில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக தகவல் பரவியது. இந்த முறை நாளை முதல் நடைமுறைக்கு வர உள்ளதாக அத்தகவலில் தெரிவிக்கப்பட்டிருந்தது. 

இதனால் ரேசன் கடைகளில் பொருட்களை வாங்க ஆதார் அட்டை கொண்டு செல்வது அனைவருக்கும் சாத்தியப்படுமா என வினவியிருந்தனர். இவ்விவகாரத்தில் ஆதார் அட்டை இல்லாதவர்களின் நிலை குறித்த அரசு தெளிவுப்படுத்த மக்கள் கோரினர். 


இந்நிலையில் தற்போது மேற்கண்ட தகவலை மறுத்துள்ள உணவுத் துறை அமைச்சர் காமராஜ், ரேசனில் போருட்கள் வாங்க பழைய முறையே தொடரும் என தெளிவுபடுத்தியுள்ளார்.   
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.