பிரிட்டனின் வலது சாரி கட்சியொன்றைச் சேர்ந்த போட்டியாளர் ஒருவர் சாதிக் கானுக்கு மறுபுறமாக திரும்பி நின்று தமது அதிருப்தியை வெளிப்படுத்தினார்.
போல் கோல்டிங் எனும் இவர், லண்டன் மேயர் பதவிக்கு பிரிட்டன் ஃபெர்ஸ்ட் எனும் கட்சியின் சார்பில் போட்டியிட்டவர்.
இத்தேர்தலில் தொழிற்கட்சி வேட்பாளரான சாதிக் கான் வெற்றிபெற்றதை அறிவிக்கும் நிகழ்வு லண்டனில நேற்றுமுன்தினம் நடைபெற்றது. சாதிக் கான் உட்பட பல கட்சிகளினதும் மேயர் வேட்பாளர்கள் கலந்துகொண்டனர்.
இதில் சாதிக் கான் உரையாற்றியபோது, அவருக்கு தனது முதுகை காட்டும் விதமாக போல் கோல்டிங் திரும்பி நின்றார்.
இரண்டாமிடம் பெற்ற கன்சர்வேட்டிவ் கட்சி வேட்பாளர் ஸாக் கோல்ட்ஸ்மித் உரையாற்ற ஆரம்பித்தபோதே போல் கோல்டிங் மீண்டும் சரியான நிலைக்குத் திரும்பினார்.
முஸ்லிம் ஒருவர் லண்டன் மேயராக தெரிவுசெய்யப்பட்டதை ஆட்சேபிப்பதற்காக போல் கோல்டிங் இவ்வாறு திரும்பி நின்றார் எனத் தெரிவிக்கப்படுகிறது.
போல் கோல்டிங் நடவடிக்கையை தொழிற்கட்சி எம்.பி.கேர்ல் டேர்னர் உட்பட பலர் கடுமையாக விமர்சித்துள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக