Breaking News
recent

ஸ்காட்லாந்தில் முஸ்லிம் சிறுவனுக்கு, ஏற்பட்ட மகா கொடுமை.!


ஸ்காட்லாந்தில் வசித்து வரும் முஸ்லிம் குடும்பத்தினர் மீது மர்ம நபர் தாக்குதல் நடத்த முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாகிஸ்தானை சேர்ந்த 2 வயது சிறுவன் Mohammad Sudais. எதிர்பாராத விபத்தில் தந்தை, தாய் மற்றும் சகோதரனை இழந்த Mohammad Sudais முகத்தில் தீக்காயங்களுடன் சிகிச்சைக்காக தன்னுடைய மாமா வீட்டில் தங்கியுள்ளான்.

இவர்கள் குடும்பத்தினருடன் ஸ்காட்லாந்தின் Glasgow நகரில் வசித்து வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த வெள்ளிகிழமையன்று Mohammad Sudais தோட்டத்தில் விளையாடிக் கொண்டிருந்த போது, விரைந்து வந்த மர்ம நபர் “வெடிகுண்டு வைத்து உன்னையும், உன் குடும்பத்தினரையும் கொலை செய்து விடுவேன்” கூறி கொண்டே சிறுவன் மீது தாக்குதல் நடத்த வந்துள்ளார்.

மேலும் நீங்கள் எங்கிருந்து வந்தீர்களோ அங்கேயே திரும்பி செல்ல வேண்டும் என்றும் மிரட்டியுள்ளார்.

இதுதொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ள நிலையில் பொலிசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

இதுகுறித்து Mohammad Asif கூறுகையில், Mohammad Sudais அனைவரிடமும் அன்பாக பழக கூடியவன், எப்போதுமே தோட்டத்திலேயே விளையாடிக் கொண்டிருப்பான்.

நாங்கள் பல வருடங்களாக இங்கே வசித்து வருகிறோம், எங்களது அண்டை வீட்டாரருடன் நல்ல நட்பு உள்ளது.

இதுவரையிலும் எங்களுக்கு எவ்வித அச்சுறுத்தலும் இல்லாத நிலையில் தாக்குதல் நடத்த முயன்றது குறித்து என் மனைவியும், மகளும் அச்சமடைந்துள்ளனர்.

நாங்கள் அந்த நபரை பார்த்தது கூட கிடையாது, எங்கள் மேல் அவருக்கு அப்படியென்ன கோபம் என்று தான் எனக்கு புரியவில்லை.

அனைவருக்கும் வாழ்வில் பிரச்னைகள் இருக்கத்தான் செய்யும், அதற்காக குடும்பத்தினர் மீது எப்படி தாக்குதல் நடத்தலாம் என கேள்வி எழுப்பியுள்ளார்.
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.