Breaking News
recent

வாலிகண்டபுரம் அருகே குளிக்க சென்ற சிறுவர்கள் இருவர் நீரில் முழ்கி உயிரிழப்பு.!


பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை அடுத்துள்ள வாலிகண்டபுரத்தை சேர்ந்தவர் சர்தார் மகன் ரியாஸ்(வயது 12). இவர் பெரம்பலூரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வந்தார். 

இதேபோல் அதே ஊரை சேர்ந்த அப்பாஸ் மகன் அப்ரோஸ்கான்(11) அயன்பேரையூரில் உள்ள தனியார் பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் தற்போது கோடை விடுமுறை என்பதால் நேற்று ரியாசும், அப்ரோஸ்கானும் குளிப்பதற்காக ஊருக்கு அருகில் திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையையொட்டி உள்ள கிணற்றுக்கு சென்றுள்ளனர். 

மாலை நீண்ட நேரமாகியும் அவர்கள் இருவரும் வீடு திரும்பாததால், அதிர்ச்சியடைந்த அவர்களது பெற்றோர்கள் அவர்களை தேடி சென்றனர். அப்போது கிணற்றின் மேல் பகுதியில் ரியாஸ் மற்றும் அப்ரோஸ்கானின் உடைகள் கிடந்தன. 

இதனால் அவர்கள் கிணற்றில் மூழ்கியிருக்கலாம் என்று கருதிய, அவர்களுடைய பெற்றோர்கள் உடனடியாக இது குறித்து மங்களமேடு போலீசாருக்கும், பெரம்பலூர் தீயணைப்பு மீட்பு படையினருக்கும் தகவல் கொடுத்தனர். 

அதன்பேரில் தீயணைப்பு மீட்பு படையினர் அங்கு விரைந்து வந்து கிணற்றில் இருந்து தண்ணீரை மின் மோட்டார் மூலம் வெளியேற்றி மாணவர்களை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். 
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.