Breaking News
recent

'கெமிக்கல்’ கலந்த மைதாவுக்கு தடை! உயர்நீதிமன்றம் அதிரடி.!


வேதிப்பொருட்கள் கலக்கப்பட்ட மைதாவை தமிழகத்தில் தடை செய்யுமாறு உணவு பாதுகாப்பு துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.

நாகை மாவட்டம், வேதாரண்யத்தை சேர்ந்த ராஜேந்திரன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், மைதா மாவு தயாரிக்கும் போது அதன் மென்மை தன்மைக்காக வேதிப்பொருள் சேர்க்கப்படுகிறது. 

இதனால் இன்சுலின் உற்பத்தி குறைகிறது. சர்க்கரை நோயை உருவாக்கும் இந்த வேதிப்பொருள் அமெரிக்காவில் தடை செய்யப்பட்டுள்ளது. 

எனவே தமிழகத்தில் இதனை தடை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியுள்ளார்.

இந்த மனு தலைமை நீதிபதி சஞ்சய் கிஷன் கவூல், நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் ஆகியோர் கொண்ட அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது. 

அப்போது வேதிப்பொருள் கலக்கப்பட்ட மைதாவை 3 மாதத்திற்குள் தடை செய்யுமாறு உணவு பாதுகாப்பு துறைக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

நன்றி:விகடன்
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.