வெளிநாட்டு முஸ்லிம்களை நாட்டுக்குள் அனுமதிக்கக் கூடாது என்ற முடிவில் உறுதியுடன் இருப்பதாக அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட உள்ள டொனால்டு டிரம்ப் மீண்டும் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சி சார்பில் ட்ரம்ப் களமிறங்குவது ஏறக்குறைய உறுதியாகிவிட்ட நிலையில் இந்த பேச்சு வெளியாகியுள்ளது.
மேலும் சட்டவிரோதமாக அமெரிக்காவில் குடியேறியவர்கள் வெளியேற்றப்படுவார்கள் என்றும் ட்ரம்ப் கூறியுள்ளார். ட்ரம்ப்பின் இந்தப் பேச்சுக்கு ஜனநாயகக் கட்சி சார்பில் அதிபர் வேட்பாளராக போட்டியிடும் ஹில்லாரி கிளின்டன் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக