Breaking News
recent

பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு: 499 மதிப்பெண்கள் பெற்று 2 பேர் முதலிடம்.!


எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு கடந்த மார்ச் மாதம் 15–ந் தேதி தொடங்கி ஏப்ரல் 13–ந் தேதி முடிவடைந்தது. இந்த தேர்வுக்கான விடைத்தாள்கள் மதிப்பீடு செய்யப்பட்டு, மதிப்பெண்கள் கம்ப்யூட்டரில் பதிவு செய்யும் பணியும் முடிவடைந்தது.

இதைத்தொடர்ந்து தேர்வு முடிவு இன்று (புதன்கிழமை) காலை 9.31 மணிக்கு வெளியிடப்பப்பட்டது.  இதில் 500க்கு 499 மதிப்பெண்கள் பெற்று இரண்டு பேர் முதலிடம் பெற்றுள்ளனர். 

 இதில் ராசிபுரம் எஸ்.ஆர்.வி., எக்செல் பள்ளி 499 மதிப்பெண் பெற்று மாநிலத்தில் பிரேமசுதா என்ற மாணவியும், விருதுநகர் மாவட்டம் பெரியவள்ளிக்குளம் நோபல் மெட்ரிக் பள்ளியை சேர்ந்த சிவக்குமார் என்ற மாணவரும் மாநில ஆளவில் முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளனர். 

அதேபோல், 498 மதிப்பெண்கள் பெற்று இரண்டாம் இடத்தை 50 மாணவ, மாணவியரும், 497 மதிப்பெண்கள் பெற்று மூன்றாம் இடத்தை 224 -க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியரும் பெற்று சாதனை பெற்றுள்ளனர்.

 ஒட்டுமொத்த தேர்ச்சி சதவீதம் 93.6 சதவீதம் மாணவ, மாணவியர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது கடந்த ஆண்டை விட அதிகமாகும். வழக்கம் போல் இந்த ஆண்டும் மாணவர்களை விட மாணவியரே அதிகம்  தேர்ச்சி பெற்றுள்ளனர்.
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.