தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் ஜே.எஸ்.ரிபாயீ வெளியிடும் அறிக்கை:
கடந்த 21.12.2015 அன்று நெல்லை மாவட்டம் ஏர்வாடியைச் சேர்ந்த காஜாமைதீன் என்ற வாலிபர் சமூகவிரோத சக்திகளால் மிகக்கொடூரமாக வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். கொலை நடந்த விதமும், சூழ்நிலையும் ஆராய்ந்தால், முஸ்லிம் என்ற ஒரே காரணத்திற்காக மட்டுமே கொலை செய்யப்பட்டதாக தெரிகிறது.
இதைக் கண்டித்தும், உண்மைக் குற்றவாளிகளை உடனடியாகக் கைது செய்யக் கோரியும், கொலையானவரின் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் இழப்பீடாக கொடுக்கும்படியும் தமிழக அரசை வலியுறுத்தி இருந்தோம். இதே கோரிக்கையை ஏர்வாடி பொதுமக்களும், ஜமாஅத்தார்களும், இஸ்லாமிய அமைப்புகளும் வலியுறுத்திப் போராடி வந்தனர்.
இந்நிலையில் இன்று (27.12.2015) கொலையானவரின் குடும்பத்திற்கு ரூ.3 லட்சம் இழப்பீடு அளிப்பதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இவ்வறிவிப்பை வரவேற்பதோடு மட்டுமின்றி, தமிழக முதல்வர் அவர்களுக்கு நன்றியையும், பாராட்டையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
அத்தோடு இழப்பீடு வழங்கப் பரிந்துரைத்த மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல்துறைக் கண்காணிப்பாளருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.
மேலும் விரைவாக குற்றவாளிகளைக் கண்டித்து சட்டத்தின் முன் நிறுத்தி தண்டனை வாங்கித் தரும்படியும், தமிழக மக்களுக்கு மத்தியில் நல்லிணக்கத்தையும் பதற்றமற்ற சூழலையும் ஏற்படுத்த உரிய நடவடிக்கை எடுக்கும்படியும் கேட்டுக் கொள்கிறோம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக